Kala Bhairavar Pooja

பெளர்ணமி

பெளர்ணமி தியான பிரார்த்தனை ( பொது நலச் சேவை)

அருட்சிவஞான பீடத்தில் ஒவ்வொரு பவுர்ணமிதோறும் நள்ளிரவு தியானமும், வேள்வியும் செய்வது வழக்கம்.

மின்னஞ்சல் மூலம் தங்களின் கோரிக்கையை சமர்ப்பிவர்களுக்கு ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் சித்தர்களிடமும், அருட்சிவமாகிய பரம்பொருளிடமும் அருட்சிவஞான பீடம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

E-mail: saimeenan@gmail.com

இவ்வலைப்பூவில் பின்தொடர்பவராக சேர்ந்தவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக்‍கொள்கின்றேன்.

Monday, September 20, 2010

சிவயோகசாரம் 04

சிவயோகசாரம் 03ன் தொடர்ச்சி..
மாணாக்கரின்
நிலை


    உத்தம ஜென்மமாயும், வித்தைக்கு உடையவனாயும், சாந்த சற்குணம் உடையவனாயும், பற்றில்லாதவனாயும், காமசங்கற்பம் இல்லாதவனாயும், கோபத்தை வென்றவனாயும், சத்திய தருமத்தை விரும்பினவனாயும்,  குரு பணிவிடையில் பிரியமுள்ளவனாயும், மாதா பிதாக்களை உபசரிப்பவனாயும் தனது கிருத்திலிருப்பனாயும், நல்லொழுக்கம் உடையவனாயும், சற்சீடனென்னும் பக்குவம் உடைவனாயும் உள்ள மாணாக்கனே இந்த ராஜயோகத்துக்கு அதிகாரியென்று சொல்லப்படுவான். 

இத்தன்மைப்பட்ட நற்சீடன் சாட்சாத்காரத்தை உணர்ந்த ஞானாசாரியரைக் கண்டெடுத்து, அவர் திருவடிகளில் பணிந்து, அவர் மனம் களிகூறும்படி நடந்து உடல், பொருள், ஆவி மூன்றும் அச்சற்குருவின் திருவடியில் தத்தஞ்செய்து, அவரால் அநுக்கிரகிக்கும் திருவடித் தீட்சையையும், பிராணாயமத்துக்குரிய மூலமந்திரத்தில் முதல் வாக்கியத்தையும், இந்த யோகத்தின் விதிகளையும் உபதேசிக்கப்பெற்று, குருவின் சன்னிதியிலிருந்து, சற்குருவால் சொல்லாமற் சொல்லும் முதல் வாக்கியத்தை உன்னாமல் உன்னி யோகசாதனை செய்து வருங்காலையில் சுவானுபவத்தின் கண் அடையாநின்ற சம்சயங்கள் அனைத்தும் தீரும்படி அவ்வாசிரியரிடத்தில் விண்ணப்பம் அடிக்கடி செய்து கொண்டு, அந்தச் சங்கற்பம் நசிக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டுவதாம். 



//..திருவடி தீட்சையென்பது குருவின் திருப்பாதத்தை சீடனின் தலைமீது வைத்து தீட்சை அளிப்பதாகும். தற்காலத்தில் திருவடி தீட்சை அளிக்கும் அளவிற்கு தகுதியுள்ள நல்லதொரு சற்குருவினை நான் கண்டதில்லை. மாறாக இறைவனிடம் திருவடி தீட்சை பெறும் பேறானது மிகச்சிறப்பானது ஆகும். திருஅருட்பிரகாச வள்ளற்‍பெருமானார் இறைவனிடம் திருவடி தீட்சைப் பெற்றவர் ஆவார்கள். 

அடுத்ததாக பிராணவாயுவின் நிலை பற்றி பூரணானந்தர் குறிப்பிடுகின்றார்.. பார்ப்போம்...//

( குறிப்பு :  எனது எழுத்துக்கள் நீல  நிறத்திலும், சிவயோகசாரம் நூலின் எழுத்துக்கள் வெள்ளை நிறத்திலும் வித்தியாசத்திற்காக காட்டப்படுகின்றது.  )

Tuesday, September 14, 2010

நான் யார்?. விவாத மேடை


நான் யார் ?. 
நீங்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய கேள்வி இது. என்னை நானே முதலில் கேட்டுக்‍கொள்கின்றேன்.

இந்த அருட்சிவம் வலைப்பதிவின் இடுகை இடுபவரின் பெயர் அருட்சிவஞானசித்தர் என்று உள்ளதற்காக சிவயோகசாரம் 02பதிவுக்கு திரு. டுபாக்கூர் பதிவர்  பின்வருமாறு கருத்துரை கூறியுள்ளார். (இவரின் கருத்துரைக்கு நான் நன்றி சொல்ல கடைமைப்பட்டுள்ளேன்).

//எனக்கு ஒரு அடிப்படை சந்தேகம்.. எனக்குத் தெரிந்து சித்தர்களாய் அறியப் படும் எவரும் தங்களை சித்தன் என்று சொல்லிக் கொண்டதாய் தெரியவில்லை. மேலும் சித்தர்களின் பாடல்களில் கூட தங்களின் குருநாதர்களின் பெயரைத்தான் சொல்லியிருக்கின்றனரே தவிர அவர்களை சித்தர்கள் என்று அடைமொழியோடு சொன்னதில்லை...அப்படி இருக்க உங்களை நீங்களே சித்தர் எனச் சொல்லிக் கொள்வது அபத்தமாக இல்லையா?. //
பெயர் இல்லாதவர் சிலரும் இதே கருத்தை கூறியுள்ளார்கள்.
இவர்கள் உண்மையை தெரிந்துகொண்டுதான் இருக்கின்றார்களா?. அல்லது சித்தர்களை பற்றி அறியாதவர்களாக இருக்கின்றார்களா? என்று நான் அறியவில்லை.
சரி. கேள்வி என்று ஒன்று வந்துவிட்டது?. பதிலினை தேடுவோம்.


சித்தர் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?
சித்தர்கள் என்றால் யார்? சித்தர்களின் வகைப்பாடு எவை?
அவர்கள் தோற்றுவித்த கலைகள் எவை?எவை?
சித்தர் நிலை என்றால் என்றால் என்ன ?.
ஒரு சராசரி மனிதன் சித்தர் நிலை அடைய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?.
இந்த கலியுகத்தில் சித்தர்கள் நம்மிடையே வாழ்கின்றார்களா?
சித்தர்கள் அவசியத்தைக் கருதி தற்காலத்தில் பிறப்பு எடுக்கின்றார்களா?.
சித்தர்கள் தற்காலத்தில் தோரயமாக எத்தனை பேர்கள் ரூபமாக, அரூபமாக உள்ளனர்?.
அருட்சிவஞானசித்தர் என்ற சொல்லுக்கு பொருள் என்னவென்று கொள்ளலாம்? (கவனிக்க அருட்சிவஞானசித்தர் என்ற சொல்லுக்கு மட்டும்).

இன்னும் பல்வேறு கேள்விகளுக்கான விடைகளை, தங்களது கருத்துக்களை ஆன்மீகம், சித்தர்கள் தொடர்பான வலைப்பதிவர்கள், வலைப்பதிவு வாசக, வாசகிகளை, இந்த பதிவில் பின்னூட்டக் கருத்தாகவோ, அல்லது saimeenan@gmail.com என்ற மின்முகவரிக்கு கட்டுரையாகவோ அனுப்பிவைத்து உதவும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
சித்தர்கள் தொடர்பான தளங்கள், வலைப்பதிவுகள் இருந்தாலும் அதன் முகவரியை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டுகின்றேன். உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் இப்பொருள் குறித்து விவாதித்து பதில் அனுப்பலாம்.

நான் எனது பதில்களையும் அவ்வப்போது இவ்வலைப்பதிவில் பதிவேற்றுகின்றேன். மேற்படி பொருள் குறித்து ஒரு ஆரோக்கியமான விவாதம் இப்பதிவில் பின்னூட்ட வடிவிலேயே வெளியிட எண்ணியுள்ளேன். சித்தர்களின் ஆசியும், என் குருநாதர் சுருளிமலைச் சித்தர் கதசசிகாரரின் ஆசியும் நான் யார்? என்று அறிந்து மீண்டும் உறுதிபடுத்தும் என்று நம்புகின்றேன்.

என்னை நான் தெளிவு படுத்திக் கொள்ள எனக்கு உதவும்படி வேண்டி இந்த விவாதத்தை சுபமாக ஆரம்பிக்கின்றேன். சுபமாகவே முடிய அருட்சிவம் என்னும் பரம்பொருளை வேண்டுகின்றேன்.
அன்புடனும்,
அருளுடனும்,
என்றும் தங்கள் நட்பை வேண்டும் ஓர் ஜீவன்.

Monday, September 13, 2010

சிவயோகசாரம் 03

சிவயோகசாரம்02 ன் தொடர்ச்சி
 
காப்பு
நேரிசை வெண்பா
 
துவராடை யுள்ளோருந் தூயுடையா ருய்வான்
சிவயோக சாரமெனச் செப்ப-நவையில்புகழ்
கொண்டபர வைந்துகரக் கோநின் னடிகட்குத்
தண்டனிட் டேனருளைத் தா.


//மேற்படி காப்புப் பாடல் ‍விநாயகரின் அருள்வேண்டி பாடப்பட்டுள்ளது. தெளிவாக உள்ளதால் விளக்கம் இங்கு தேவைப்படவில்லை. //
 
ஆசிரியர் நிலை
 
இந்த ராஜயோகத்தை அப்பியாசிக்கும் ஆசிரியன் தெளிந்த ஆத்துமஞானியாய், அடுத்தவர்களை ஆதரித்துப் போதிக்கத் தக்கவனாயிருக்க வேண்டியது. அதாவது சின்முத்திரையாகிய மெளன நிலை ஈதென்றும், அதைக் கைவல்லியப் படுத்துவதற்குரிய ஆசனம் முதலிய விதிகள் இவையென்றும், குண்டலி சத்தி ஈதென்றும், அதை விழிப்பிக்கும் மார்க்கம் ஈதென்றும், இதுவே சிவராஜயோகமென்றும், இந்த யோகம் செய்யத்தக்கவர் பெறத்தக்க நாதாந்தம் இதுவென்றும், இது வசமுற்றால் ஒரு மயக்கந் தோன்றும் என்றும், அது நீங்கும் வரையில் நின்றால் அருள்தரிசனம் உதயமாகும் என்றும், அவ்வனுபவம் கிடைக்கில் காண்பானுதிகள் இறக்கும் என்றும், மனம் அசையாதிருக்கும் என்றும், அப்போது அந்த நாதாந்தத்தில் பஞ்சாட்சரம் முதலியவைகள் தோன்றாது ஒடுங்கும் என்றும், இத்தண்மைப்பட்ட சுவானுபவ சாட்சாத்காரத்தை உணர்ந்த ஆத்தும ஞான ஆசாரியனாய் இருக்கவேண்டும்.

தொடர்ச்சி அடுத்த பதிவில்... 

Saturday, September 11, 2010

விநாயகர் சதுர்த்தி பிரார்த்தனை



உற்சவர்  மற்றும்  மூலவர்
ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயம், 
இரயில்வே ஆண்டிக்குப்பம். குறிஞ்சிப்பாடி-607 303. தமிழ்நாடு. 

இன்று விக்ருதி வருடம் ஆவணி மாதம் 26 தேதி மாலை 6 மணியளவில் விநாயகர் சதுர்த்தி விழா எங்களுடைய ஸ்ரீசித்திவிநாயகர் திருக்கோயிலில் மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனையுடன் நடைபெற உள்ளது. 
இவ்வலைப்பதிவை பார்வையிடும்  அனைத்து அன்பர்களும் நலமுடன் வாழ ஸ்ரீசித்தி விநாயகரிடம் பிரார்த்தனை செய்கின்றேன். 
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பல்வேறு இணைய தளங்களில் மிகவிரிவாக செய்திகள் வெளிவந்துள்ளபடியால் மேற்கொண்டு நான் இங்கு விவரிக்கவில்லை.

Tuesday, September 7, 2010

சிவயோகசாரம்02


வணக்கம், சிவயோகசாரம்01 இடுகை வெளியிட்டு 10 நாள்களாகிவிட்டது.
எனது நண்பர் ‍‍ஜெகதீஸ்வரன் நீங்கள் புதிய இடுகையை விரைவில் வெளியிடுங்கள், நீண்டநாட்கள் எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று அன்போடும், உரிமையோடும் கடிந்துகொண்டார். அவருக்கு இந்த வலைப்பதிவின் மீதுள்ள அக்கறைக்கு நன்றி. இனி இதுபோன்று நீண்டநாட்கள் ஆகாது என்பதை இவ்வலைப்பதிவுக்கு வந்து செல்பவர்களுக்கு பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அடுத்து,
திரு. டுபாக்கூர் பதிவர் அவர்கள் மேற்படி சிவயோகசாரம்01 இடுகை குறித்து பின்வருமாறு கருத்துரை கூறியுள்ளார். கருத்துரைக்கு நன்றி.
கருத்துரை பின்வருமாறு //..உங்களிடம் இருக்கும் ஒரு நூலினை ஈயடிச்சான் காப்பியாக டைப் செய்து போடுவதில் எந்த பலனும் இல்லை. அதற்கு ஒரு நல்ல தட்டச்சரே போதுமானது. நீங்கள் உங்களைப் பற்றிக் கொடுத்திருக்கும் இத்தனை பெரிய பில்டப்புகளினால்....இந்த நூலினை நீங்கள் உள்வாங்கியதன் புரிதலை சமகால எழுத்து நடையில் பதிய முயற்சியுங்கள். வாழ்த்துக்கள்.....//
அவருக்கும், இதேபோன்று கருத்துடையவர்களுக்கும் எனது பணிவான பதில் இதோ கீ‍ழே கொடுத்துள்ளேன்.

என்னைப்பற்றிய சில விபரங்களை எனது Profile-ல் கொடுத்துள்ளேன். பார்த்து அறிந்துகொள்ள வேண்டுகின்றேன்.
எனது முதன்மை நோக்கம் - அழிந்து வரும் பழைய ஆன்மீகம், சித்தர் கலைகள் சம்பந்தப்பட்ட நூல்கள், மெய்ச்சாத்திரங்கள் போன்றனவற்றை மேற்படி நூல்களின் ஆசிரியர்கள் கூறியவற்றை எவ்வித மாற்றமும் இல்லாமல் (சீர்வரிசை. நேர், நிரை, இலக்கணங்கள் பழைய தமிழ்வசன நடை இவற்றினை) உள்ளது உள்ளபடியே ஒரு நல்ல தட்டச்சனாக செயல்பட்டு பிற்கால சந்ததியினருக்கு மின் நூல் வடிவில் வெளியிடவேண்டும் என்பதாகும்.
காரணம் என்னவெனில் இன்றைக்கு நாம் வாசிக்கும் திருவாசகம் சிவபுராணம் நூலில் நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க என்று வாசிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதற்காக சீர்களை குலைத்து வெளியிட்டு உள்ளனர். இது தெரியாமல் நான் சிவபுராணத்தை ஆயிரக்கணக்கில் அருட்சிவஞானபீடம் சார்பில் அச்சடித்து சிவனடியார்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டேன்.
சமீபத்தில் ஒரு உறவினர்வீட்டுக்கு (இறுதி மரியாதை செலுத்துவதற்கு) சென்றிருந்தேன். அங்கு உறவினர் ஒருவர் சிவபுராணம் படித்துக்கொண்டிருந்தார். வாங்கி பார்த்தபோது அது பழையகாலத்து சிவபுராணம் நூல் என்று தெரியவந்தது. அதில் சிவபுராணம் வரிகளை பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன். காரணம் சீர்முறை வேறாக இருந்தது. எனக்கு என்மீதே வருத்தம் ஏற்பட்டது. மாணிக்கவாசகரின் சிவபுராணத்தை சீர்குலைத்து அச்சடித்து வெளியிட்டுவிட்டோமே, இதுவா நாம் மாணிக்கவாசகருக்கும், தமிழுக்கும் செய்யும் தொண்டு என்று வேதனைப்பட்டேன். அதன்பிறகு மேற்படியான நூல்களைப்போன்று உள்ள பழைய நூல்களை அந்நூலில் உள்ளதைப் போன்று அப்படியே வெளியிட முடிவு செய்தேன். ( காப்பி ரைட்ஸ் இல்லாத, இதுவரை மின்நூலாக வெளிவராத நூல்கள் இருந்தால் தெரிவியுங்கள். அவற்றை தேடிக்கண்டுபிடித்து மின்நூலாக்க உதவுகின்றேன்)
அந்நோக்கத்தின் முதல் நூலே சிவயோகசாரம் தொடர்.
இந்நூலினை நான் கற்று உணர்ந்தேனா?. ஆம். (இதற்கு எனது முந்தைய இடுகைகள் பதில்அளிக்கும்)
பின்னர் ஏன் உங்களுடைய நடையில் வெளியிட தயக்கம் எனில்?., தயக்கம் இல்லை. எளிமையாக உள்ள இந்நூலுக்கு விளக்கம் தேவையில்லை என்றுதான் நான் படித்து உள்வாங்கிய விஷயத்தை எனது நடையில் சொல்லவில்லை. உள்வாங்குதல் என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஆனாலும் ஆங்காங்கே தேவைப்படும் இடத்தில் எனது விளக்கம் வெளிப்படும்.
 

( குறிப்பு : இனி எனது எழுத்துக்கள் நீல நிறத்திலும், சிவயோகசாரம் நூலின் எழுத்துக்கள் வெள்ளை நிறத்திலும் வித்தியாசத்திற்காக காட்டப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். )





சிவயோகசாரம்02
குரு வணக்கம்
எண்சீர் விருத்தம்
 
ஆரணசாத் திரமனைத்தும் உணர்ந்து சீடர்
         அவித்தையெலாம் அகற்றியருள் புரியும் ஞான
பூரணணா யெழுந்தெளியேற் குபதே சித்துப்
          பூரணா னந்தனென நாமந் தந்த
நாரணதே சிகனாமென் குருநா தன்றன்
           நளினமல ரடியிணையைச் சிரமேற் கொண்டு
தாரணியிற் சிவயோக சார‍ மென்னுந்
           தகைபெறுமிந் நூலடியேன் சாற்ற லுற்றேன்.
 
இவ்வுலகத்திலுள்ள மெய்ச்சாத்திரங்கள், நான் யார்?. என்று அறிதற்குண்டான நூல்கள், யோகம், ஞானம், பக்தி, கர்மம் போன்ற வழிவகைகளை கற்று உணர்ந்து, அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தினை அடைய விரும்புகின்ற என்னுடைய ( சீடர்களின், மனிதர்களின்) அவித்தையாகிய மலபாசம், ஊழ்வினை, மன இருள் அனைத்தையும் நீக்கி, அருள்புரியும் பரமஞான பூரணணாய் எழுந்து, எளியேனாகிய எனக்கு அவித்தை அகல உபதேசித்து, பூரண ஆனந்தன் ( நிறைந்த ஆனந்தமுடையவன்) என்று தீட்சா நாமம் சூட்டிய ஸ்ரீநாராயண தேசிகன் என்னும் எனது குருநாதரின் நளினமுடைய, அழகான, மெல்லிய மலரடிகளை (திருவடிகளை) எனது சிரசின் மேல் வைத்துக்கொண்டு, இவ்வுலகத்திற்கு சிவயோகசாரம் என்னும் இந்த நூலினை (சிவயோகத்தை போதிக்க வல்ல தகைமையுடைய நூலினை) இயற்றுகின்றேன்.

தொடரும்...